எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "உலகளாவில் கல்வி முறை மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின்" தொடர்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையம்மாள் ஹாலில் இன்று நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கமாக அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் சர்வேதேச அளவில் உலகளாவிய தாக்கத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த கற்பித்தல் மற்றும் கல்வி வளர்ச்சி நிலையில் உன்னத நிலையை அடைவதே ஆகும். இதில் கோயம்புத்தூர் நகரில் புகழ்பெற்ற தன்னாட்சி கல்லூரிகளில் இருந்து கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை விவாதித்தனர்.

இதில், ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் "நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை" பற்றியும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் "கற்பித்தல் மற்றும் கற்றல்" குறித்தும் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜ்குமார் "வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தொழில் முனைவு" குறித்தும் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன் "உயர் கல்வியின் புதுமை" பற்றியும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் நிர்மலா "ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை விரிவாக்கம்" என்ற தலைப்பிலும் பேசினார். இதனை ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருநாவுகரசு நடுவராக இருந்து தொகுத்து வழங்கினார்.


இதில், ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் "நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை" பற்றியும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் "கற்பித்தல் மற்றும் கற்றல்" குறித்தும் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜ்குமார் "வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தொழில் முனைவு" குறித்தும் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன் "உயர் கல்வியின் புதுமை" பற்றியும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் நிர்மலா "ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை விரிவாக்கம்" என்ற தலைப்பிலும் பேசினார். இதனை ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருநாவுகரசு நடுவராக இருந்து தொகுத்து வழங்கினார்.
